நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.சினிமாவிலிருந்து மூன்று வருடங்களாக விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் .
அதர்வாவின் பாணா காத்தாடி ,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பத்ரி வெங்கடேஷ் .இவர் தான் ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் .அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு ஜோடியாக கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் .மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி டாக்டராக நடிப்பதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவும்,திருவல்லிக்கேணி, வடசென்னை, கட்ச், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…