சிம்பு மற்றும் திரிஷா திருமணம் குறித்து வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று சிம்பு தரப்பிலிருந்து விளக் கமளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு அலை, விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் நல்ல நட்புடன் பழகுபவர்கள். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து பல விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் சிம்புவும், திரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி செய்தி ஊடகம் ஒன்று செய்திகள் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிம்பு தரப்பில் இருந்து கூறியதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இது போன்ற தவறான செய்திகளை பரப்பி மகிழ்கின்றனர். சிம்பு மற்றும் திரிஷா திருமணம் என்று கூறியது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளனர். கடந்த 2017ல் திரிஷா கூறிய போது கூட, ஏழு ஆண்டுகளாக தனக்கு சிம்புவை தெரியும் என்றும், நான் காதலிக்க விரும்பும் நபர் அவர் இல்லை என்றும், அவர் தனக்கு நல்ல நண்பர் என்று தான் நம்புவதாகவும்,நண்பனை காதலிக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சிம்பு திரிஷாவை திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…