முக அழகுக்காக பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக்குகளில் முல்தானி மெட்டி மற்றும் கடலை மாவு தான் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் மட்டும் அவ்வப்போது பழங்களை முக அழகுக்கு பயன்படுத்துகின்றனர். இயற்கையாக எதை பயன்படுத்தினால் முகத்தில் நிச்சயம் பலன் தரும்.
ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் முக அழகுக்கு பெரிதும் உதவும் என உங்களுக்கு தெரியுமா? ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தளர்ந்த சருமத்தை இறுக்கமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இன்று வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், முக பரு உள்ள சருமம் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது, அதில் உள்ள நன்மைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பயன்கள்: தோல் சுருங்கிய சருமம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இவை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற பெரிதும் உதவும்.
உபயோகிக்கும் முறை : முதலில் ஸ்ட்ராபெரியை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கரண்டி ஓட்ஸை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். 5 நிமிடம் கழித்து இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி கைகளால் நன்றாக மசாஜ் செய்யவும்.
அதன் பின் இதனை சாதாரண தண்ணீரால் கழுவி விடவும். இவை நமது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, தளர்வடைந்த சருமத்தை புதுப்பிக்க உதவும்.
பயன்கள்: ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் பருக்களை போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : ஸ்ட்ராபெரியை நன்றாக மசித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவவும். அதன் பின் 10 நிமிடங்கள் கழிந்ததும் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். நிச்சயம் சருமத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி விடும்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…