தேசிய தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் பல நகரங்கள் இருளில் மூழ்கின.
பல நகரங்களில் ஒரே நேரத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்பு மின் தடை ஏற்பட்டது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இருளில் தவித்தனர். பாகிஸ்தான் எரிசக்தி மந்திரி உமர் அயூப்கான் கூறுகையில், மின்சார விநியோகத்தை முழுமையாக மீட்டெடுக்க தொழில்நுட்ப குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், முல்தான், கராச்சி மற்றும் பைசலாபாத் போன்ற பல நகரங்களில் மின்சாரம் பாதி மீட்டெடுக்கப்பட்டது. ஆனால், சாதாரண நிலைக்கு கொண்டு வர சிறிது நேரம் ஆகும் என்று அவர் கூறினார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…