சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை. – சீன தூதர் சன் வீடோங்.
டெல்லியில் செயல்பட்டுவரும் சீன கல்வி நிறுவனமானது (Institute of Chinese Studies (ICS) Delhi), ஆனது இந்தியா-சீனா உறவுகள் குறித்து ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் இந்தியா சீன உறவு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘ இந்தியா-சீனா உறவுகளை முன்னோக்கி நகர்த்த பல முக்கிய விஷயங்களில் சீனா தன் கருத்துக்களை நேரடியாக கூற வேண்டும். சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை.’ என அவர் குறிப்பிட்டார்.
சீனாவும் இந்தியாவும் உலக தொழில் துறை மற்றும் விநியோக சங்கிலியில் பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கணக்கிடப்பட்ட உள்ளூர் புள்ளிவிவரத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் மட்டுமே 92 சதவீத இந்திய கணினிகள், 82 சதவீத தொலைக்காட்சி பெட்டிகள், 80 சதவீத ஆப்டிகல் ஃ பைபர் பாகங்கள், 85 சதவீத மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மேலும், பல்வேறு பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த வர்த்தக சங்கிலியை மாற்றுவது சற்று கடினம்.’ என அவர் கூறினார்.
‘இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தேவையானது, நுகர்வோரின் இயல்பான தேர்வு ஆகும். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத்தை துண்டிப்பது இழப்பிற்கு வழிவகுக்கும்.’ என கூறினார் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் பற்றிய கேள்விகளுக்கு சீன தூதர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…