சிம்புவின் 47 வது திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனது 47 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த காதலர் படம் என்பதில் எந்த ஒரு சந்ததேகமுமில்லை. இந்த படம் வெற்றியடைய மிகவும் முக்கியமான ஒரு காரணம் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் தான். அதற்கு பிறகு இதே கூட்டணியில் உருவான அச்சம் என்பது மடமையடா திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்பொழு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…