ஆச்சரியப்பட வைத்த தொழிலதிபர்.! டிவிட்டர் பதிவை ‘ரீ-ட்வீட்’ செய்பவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு தொகை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார்.
  • டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உலகத்தில் அனைவரும் வித்யாசமான ஆசைகளை கொண்டு இருப்பார்கள். அதில் மற்றவர்களுக்கு பரிசளிப்பதும், அல்லது ஏழ்மை மக்களுக்கு உதவி பண்ணுவதும், உள்ளிட்ட பல ஆசைகள் இருக்கும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அதை அடைபவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்களா  என்பதை தெரிந்துகொள்ள வளாக இருப்பார்கள். அதுபோன்று தொழிலதிபர் ஒருவர் அவரது வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார்.

அதாவது ஜப்பானின் யூசகு என்ற தொழிலதிபர் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் சி.இ.ஓ பதவியில் இருக்கிறார். இவர் சமீபத்தில் நிலாவுக்கு வான்வழி ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம்  பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மேலும், பல வரலாற்று சிறப்பிமிக்க பொருட்கள் மற்றும் கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதும், பின்னர் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை கோடிக்கணக்கில் வாங்கி சேர்ப்பது என உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய முயற்சியின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதாவது டிவிட்டரில் தான் பதிவிடும் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா இந்திய மதிப்புப்படி ரூ.6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். பின்னர் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் பதிவிட்டுருந்தார்.

மேலும், இதற்கு காரணத்தையும் யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறி அந்த வீடியோவில், இந்தப்பணம் குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு சந்தோசப்பட வைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சி, இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். பின்னர் சொன்னபடியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு பரிசுத்தொகையை அவர் அளித்துள்ளார். அவரின் ட்வீட்டை சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது ட்விட்டை ரீ-ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago