சுஷாந்த் தற்கொலை விவகாரம் : காதலி ரியா மீது FIR பதிவு செய்த சுஷாந்த் தந்தை.!

Published by
Ragi

சுஷாந்த் தற்கொலை விவகாரம் குறித்து காதலி ரியா மீது சுஷாந்த் தந்தை FIR பதிவு செய்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

 மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சுஷாந்த் சிங் குறித்த செய்திகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அறிய போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா  ரியா சக்ரபோர்த்தி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா மீது பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துள்ளார். அதில் எனது மகன் சினிமாவை விட்டு விட்டு கேரளாவில் வேளாண்மை செய்ய விரும்பியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரியா, தனது பேச்சை கேட்கவில்லை என்றால் உங்களது மருத்துவ அறிக்கையை ஊடகங்களுக்கு காண்பித்து உங்களை பைத்தியம் என்று அனைவருக்கும் சொல்லுவேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சுஷாந்த் ரியாவின் பேச்சை கேட்காத நிலையில், அவரது வீட்டில் முக்கியமான பொருள்களை ரியா எடுத்து சென்றதாக கூறிய சுஷாந்த் சிங்கின் தந்தையான கே. கே. சிங், தனது மகனின் தொலைபேசி எண்ணையும் ரியா பிளாக் செய்திருந்தார். இதனையடுத்து சுஷாந்த் எனது மகளை அழைத்து, ரியா செல்வதை கேட்கா விட்டால் என்னை பைத்தியம் என்று எல்லோரிடமும் சொல்வாள் என்றும், அப்போது யாரும் எனக்கு எந்த வேலையும் தர மாட்டார்கள் என்றும், நீங்கள் பேரழிவிற்கு ஆளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தியதாக அறிவித்துள்ளார்.

மேலும் சுஷாந்த் 2019ல் ரியாவை சந்தித்த பின்னரே அவர் மன நோயால் பாதிக்கப்பட்டுதாகவும், சுஷாந்த் மன நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தால் ஏன் அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் வாங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். அதனையடுத்து சிகிச்சையின் போது சுஷாந்தை ரியா அவரது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும், அவருக்கு அதிகப்படியான மருந்துகளை கொடுத்ததாகவும், ஆனால் மற்றவர்களிடம் சுஷாந்திற்கு டெங்கு காய்ச்சல் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மே ரியா முன்னணி நடிகையாக பணிபுரியும் படங்களில் மட்டுமே சுஷாந்த் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்தியதாகவும், 2019ல் சுஷாந்த் வங்கி கணக்கில் 17 கோடி ரூபாய் வைத்திருந்தார். ஆனால் அதில் 15கோடி வரை அடுத்த சில மாதங்களில் பல கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ரியா மற்றும் அவரது கூட்டாளிகளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பீகார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

41 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

58 minutes ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

16 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago