ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருந்து பெர்த் நகருக்கு குவாண்டாஸ் விமான நிறுவனத்திற்க்கு சொந்தமான “ஏர்பஸ் ஏ330” ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது விமானம் புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் அறைக்குள் இருந்து திடீரென புகை வெளியானது.எப்படி புகை வருகிறது?என்ன நடக்கிறது? என பார்ப்பதற்குள் புகை அறை முழுவதும் பரவியது. இதனால் பயணிகள் பதற்றமும், பீதியும் அடைந்தனர்.
இதை தொடர்ந்து விமானி விமானத்தை மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பினார். அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தின் 2 புறமும் உள்ள அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பயத்தில் இருந்த பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு வெளியேவர முயன்றதால் சிலருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. விமானி சிறப்பாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…