ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தலிபான்கள் எச்சரிக்கை!

Published by
Rebekal

வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை ஜி 7 அவசர கூட்டத்துக்கு இங்கிலாந்து வீரர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அவர்கள் தெரிவிக்கையில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இரு நாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடைய அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூடிய அனைத்து அமைப்புகளையும் வெளியேற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை எனவும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

57 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

1 hour ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

3 hours ago