தியேட்டரில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் -அமைச்சர் கடம்பூர் ராஜு.!

Published by
Ragi

மாஸ்டர் படத்தினை தயாரிப்பாளர்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தால் ,அதனை திரையரங்குகளில் வெளியிட கோரி தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்தது .இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படத்தினை தயாரிப்பாளர்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டால் , திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை வெளியிட கோரி தமிழக அரசு மாஸ்டர் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வானகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஸ்டர் படத்தினை திரையரங்குகளில் வெளியிட வலியுறுத்தி அரசு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியதுடன் ஜெயலலிதா திட்டமிட்டப்படி சினிமாத் துறையினருக்கான விருது வழங்கும் விழாவை எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அன்று பிரமாண்ட விருது விழாவாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார் .

Published by
Ragi

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

18 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

20 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

20 hours ago