கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராகும் பெரிய கோவில்..இன்று யாகசாலை பூஜை..!

Published by
kavitha
  • பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கொண்டாட்டம் தீவிரம்
  • இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது.

 

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள்  நடைபெற்று வருகிறது.

நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு வேதிகை அமைக்கும் பணிகளில் 300 சிவாச்சாரியார்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவிலின் விமான கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது, நேற்று வரகு தானியம் போன்றவைகள் நிரப்பி தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களை கோபுரத்தில் பொருத்தும் பணியானது நடைபெற்றது. நேற்று காலை வெண்ணாற்றில் இருந்து புனித காவிரி நீரானது கலசங்களில் யானை மீது வைத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்தனர்.

Image result for தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு"

இந்த நிகழ்வின் போது ஏராளமான பெண்கள் முளப்பாரி எடுத்தும் ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருவாசகம், திருப்பன்னிசை முழங்க வந்தனர்.

யானை மீது எடுத்து வரப்பட்ட புனித நீர் குடங்களை  கோவிலினுள் உள்ளே வைத்து யாக பூஜைகள் தொடங்கியது.இந்த பூஜைகள் அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 110 புனித நீர் குடங்களுக்கு இன்று பூஜைகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று  முதல் குடமுழுக்கு நாளான 5- ந் தேதி வரை 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஓதுவார்கள்  தமிழில் திருமறைப்படியும் மற்றும் சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படியும் மேலும் சாஸ்திரிகள் வேத முறைப்படியும் பூஜையை நடத்துவார்கள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான அதிநவீன சுழல் மேஜை ஊர்தி கொண்டு வரப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னர்  நடைபெறும் குடமுழுக்கு  என்பதால் விழாவிற்கு சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனது குறிப்பிடத்தக்கது.ள்ளன.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago