23 ஆண்டு கழித்து குடமுழுக்கு காணும் தஞ்சை…படையெடுக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Published by
kavitha
  • கோலகலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் காணப்படும் தஞ்சை பெரியகோவில்
  • 23 ஆண்டுகழித்து இன்று குடமுழுக்கு தஞ்சை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி அம்மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது. 23 ஆண்டு கழித்து குடமுழுக்கு நடைபெறுவதால் இந்த விழாவில் கலந்து கொள்ள சுமார் 5 முதல் 7 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு உள்ளது.

விழா நடைபெறும் கோயில் மற்றும் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 275 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 238 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மருத்துவ உதவிக்காக 100 மருத்துவர்கள் அவர்களோடு 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மேலும் 6 மருத்துவக்குழுக்கள் 26 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 28 அவசர சிகச்சை ஊர்திகள் என்று விரிவான நிலையில் தயாராக உள்ளனர்.

தீ விபத்து போன்ற அசம்பவ விதங்களை எதிர்கொள்ள, நவீன வசதியுடைய தீயனைப்பு வாகனம் மற்றும் 5 சாதாரண வாகனங்களோடு, 16 பாம்பு பிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்ற வாகனங்கள் நிறுத்த 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயிலினுள் நடைபெறும் நிகழ்ச்சிகளை வெளியில் இருந்து காணும் வகையில் எல்.ஈ.டி. திரைகளும் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் மக்களின் வசதிக்காக அமைக்கப் பட்டுள்ளது. கோயில் உள் மற்றும் வெளிபகுதியில் ஏற்கனவே பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களோடு தற்போது கூடுதலாக 8 அதி நவீன வசதிபடைத்த கேமிராக்கள் உள்பட 192 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.மேலும் இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க தனியாக கட்டுபாட்டு அறையை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் இவ்விழா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தஞ்சை நகருக்குள் வரும் முக்கிய சாலைகளில் 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனங்கள் சோதனையுன் நடத்தப்பட்டு வருகிறது.தஞ்சையில் குடமுழுக்குக்காக செய்யப்பட்ட இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் காவல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

7 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

8 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

11 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago