அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு பேருக்கு “அரிய மற்றும் கடுமையான வகை இரத்த உறைவு” ஏற்பட்டுள்ளது.இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“இன்று எஃப்.டி.ஏ மற்றும் @ சி.டி.கோவ் ஆகியவை ஜான்சன் அண்ட் ஜான்சன் # கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஜே & ஜே வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 6 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.இந்த ஆறு பேரும் 18 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.
தடுப்பூசி போட்ட 6 முதல் 13 நாட்களுக்குப் பிறகு தான் இந்த இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.இந்த கட்டிகள் மூளையில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் நிகழ்ந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும். “அந்த செயல்முறை முடிவடையும் வரை, நாங்கள் இந்த இடைநிறுத்தத்தை பரிந்துரைக்கிறோம் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…