பப்ஜி தடை: டென்சென்ட் நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர் இழப்பு!

Default Image

இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், டென்சென்ட் நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

இதனையடுத்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதன்பின், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீனா தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பப்ஜி செயலியை தடை செய்த நிலையில், டென்சென்ட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை மட்டும் 2 சதவீதம் சரிந்துள்ளதாகவும், அந்நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்