ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற காசாபா தாதாசாகேப் சாதவ் இறந்த தினம்…!

Published by
லீனா

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற காசாபா தாதாசாகேப் சாதவ் இறந்த தினம். 

காசாபா தாதாசாகேப் சாதவ், ஜனவரி 15-ஆம் தேதி 1926 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில், சாதார மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த மற்போர் வீரர் ஆவார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.  1996 ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிஸில் வெண்கலப் பதக்கத்தை பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.

விருதுகள்

1993ம் ஆண்டில் மகராஷ்டிராஅரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருது வழங்கி கௌரவித்தது. 2001ம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இரு விருதுகளும் சாதவ் இறந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின்னர் வழங்கப்பட்டன.

கௌரவிப்பு 

புதுதில்லியில் புனரமைக்கப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்யுத்த வளாகத்துக்கு ஒன்றிய அமைச்சகம் இவருடைய பெயரை சூட்டியுள்ளது.  மேலும், இவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறப்பு 

இவர் ஆகஸ்ட் 14-ம் தேதி, 1984-ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார்.

Published by
லீனா

Recent Posts

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

22 minutes ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

48 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

1 hour ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

2 hours ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

3 hours ago