இலங்கையில் ராட்ச பட்டன்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றதால் பரபரப்பு.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடத்திய ராட்சச பட்டம் விடும் நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கி விபரீதத்தில் முடிந்தது. பருத்தித்துறை அருகே புலோகி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், பட்டத்தின் கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராத விதமாக மேலே தூக்கி செல்லப்பட்டார்.
இதனை பார்த்த அருகில் மற்ற இளைஞர்கள் கீழே குதிக்குமாறு அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டனர். சுமார் 40 ஆதி உயரம் வரை பறந்த இளைஞர் சில நிமிடங்களுக்கு பிறகு கீழே குதித்தார். கீழே குதித்த இளைஞர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு இளைஞரின் திக்..திக் நிமிடங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…