இருவரின் காதலை நிராகரித்த பின் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இங்கிலாந்து பெண்மணி!

Published by
Rebekal

இருவரின் காதலை நிராகரித்ததற்காக பாகிஸ்தானில் வசித்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது பெண்மணி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய காலங்களில் எல்லாம் ஒரு பெண்ணிடம் சென்று தனது காதலை ஆண்கள் கூறிய பின்பு அந்த பெண்ணை நிராகரித்தாலும் எப்படி அந்த பெண்ணை சம்மதிக்க வைக்கலாம் அந்தப்பெண் விரும்பும்படி நாம் எப்படி மாறலாம் என்பதற்காக ஆண்கள் தங்களை வருத்திக் கொள்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் சென்று எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறிய பின், பெண் அதை நிராகரிக்கிறாள் என்றால் உடனடியாக எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிட் அடிப்பதும், கத்தியால் குத்தி கொலை செய்வது, கற்பழித்து கொலை செய்வது என பல கொடூரமான செயல்களை சில ஆண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய இங்கிலாந்து பெண்மணி மெய்ரா என்பவர் தன்னிடம் வந்து காதலை கூறிய இரண்டு நபர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தற்போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மாமா இது குறித்து கூறுகையில், சாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதுன் ஆகிய இருவர் மெய்ராவிடம் அவர்களது காதலை கூறியதாகவும், ஆனால் இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே நீ கடுமையான பின்விளைவுகளை சந்திப்பாய் என அப்பொழுதே அவளிடம் அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், சாதி அமீர் பட் மீது தான் அதிகம் சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

29 minutes ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

59 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

2 hours ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

2 hours ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

3 hours ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

3 hours ago