டிரம்ப் – ஜோ பிடன் விவாதம்… விரிவான விவரங்கள்…

Published by
Kaliraj

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் மறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன் விவரம்.

ஜோ பிடன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள்: 

  • அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய வரியை கூட  கட்டவில்லை.
  • தவறான வழிகளில் டிரம்ப் குடும்பம் சம்பாதித்துள்ளது.
  • டிரம்ப் சீனா உதவியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.
  • சீனாவில் அதிபர் டிரம்புக்கு ரகசிய வங்கி கணக்குகள் உள்ளன.
  • அமெரிக்க தேர்தலில் குறுக்கிட வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. முக்கியமாக ரஷ்யா தலையீடு செய்கிறது.
  • வடகொரியா அதிபர் கிம் நல்ல மனிதர் என டிரம்ப் கூறுகிறார்.
  • ஒபாமா கேர் காப்பீட்டு திட்டம் சிறப்பானது.
  • அதிபர் டிரம்பால் அமெரிக்காவில் ஒரு கோடி பேர் காப்பீட்டை இழந்துவிட்டனர்.
  • தனியார் நிறுவன காப்பீட்டு திட்டத்தை உருவாக்குவேன்.
  • கொரோனாவால் மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
  • அமெரிக்காவில் வரும் மாதங்களில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் இறப்பார்கள்
  • கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லைடிரம்ப் கூறியுள்ள குற்றச்சாட்டுகளான:
  • அதிபராகும் முன்பே என்னுடைய சீன வங்கிக்கணக்கை மூடிவிட்டேன்.
  • கோடிக்கணக்கில் முன்கூட்டியே வரி செலுத்தி விட்டேன்.
  • அமெரிக்காவில் கொரோனாவால் இறப்போர் விகிதம் குறைந்துள்ளது.
  • கொரோனாவில் இருந்து 99% இளைஞர்கள் குணமடைந்துள்ளனர்.
  • கொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொண்டனர்.
  • இந்தாண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும்.
  • அமெரிக்காவில் கொரோனா பரவ நான் காரணமில்லை. தவறு செய்தது சீனாதான்.
  • அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு அனுமதி அளிப்பதுடன் பள்ளிகளையும் திறக்க வேண்டும்.
  • சீனா, ரஷியா, உக்ரைனிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை.
    இவ்வாறு ஜோ பிடன் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
Published by
Kaliraj

Recent Posts

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

19 minutes ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

28 minutes ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

1 hour ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

1 hour ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

14 hours ago