தொடர்ந்து வரும் அவலம்.! இந்து பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்.!

Published by
murugan
  • கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
  • பின்னர் சில தினங்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து  சாருக் குல் என்ற இளைஞர் திருமணம் செய்து  கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு , அவர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று கூறியுள்ளது.

இந்துகள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்தில் இந்த சம்பவம் அதிகரித்து உள்ளது.கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இதையெடுத்து டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக மூத்த அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டனர். பாரதி பாய் (24) என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்க இருந்தது. திருமண நாளன்று  மண்டபத்தில் மணபெண்ணின் உறவினர்களும் , மணமகனின் உறவினர்களும் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பாரதி பாயை கடத்தி சென்றனர். இது குறித்து பாரதி பாயின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதில் , சாருக் குல் என்ற இளைஞர் கூலிப்படையுடன் வந்து தனது மகளை கடத்தி சென்றதாக கூறினார்.

பின்னர் பாரதி பாய் மதம் மாறிய சான்றிதழும் , அவருக்கும் சாருக் குல் என்ற இளைஞருக்கும் திருமணம் நடந்த சான்றிதழ் இணையத்தில் வெளியாகியது. இணைதளத்தில் வெளியான மத மாற்ற சான்றிதழில் கடந்த மாதம் 1-ம் தேதி பாரதி பாய் மதம் மாறியதாகவும் , அவரது பெயர் புஷ்ரா எனவும் இருந்தது.

இந்த மத மாற்று சான்றிதழ் போலியானது எனது மகள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யப்பட்டதாகவும் பாரதி பாயின்  தந்தை குற்றம் சாட்டினார். மேலும் தங்களது மகளை மீட்டு  தருமாறு போலீசாரிடம்  அவர் கோரிக்கை வைத்தார்.

Published by
murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

5 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago