உலகில் சினிமாவுக்கென்று வழங்கப்படும் மிக பெரிய விருதுகாக ஆஸ்கர் விருது கருதப்படும். 92-வது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த விழாவில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, இந்த ஆண்டு ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் , அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்தபடியாக தி ஐரிஷ் மேன், 1917 மற்றும் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
2019-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை ‘போமேனியன் ராப்சோடி’ படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை தி ஃபேவரைட் திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை ‘ரோமா’ திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர். தி ஃபேவரைட், ரோமா ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்திருந்தது.
சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை கிரீன் புக் திரைப்படம் வென்றது. அதிகபட்சமாக போமேனியன் ராப்சோடி திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது. குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த பீரியட் எண்டு ஆஃப் சென்டன்ஸ், சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தை போன்றே தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…