இணையத்தை கவர்ந்த குரங்கின் புன்னகை நன்றி புகைப்படம் – மானுடம் மனிதனுக்கானது மட்டும் அல்ல!

Published by
Rebekal

முடங்கியிருக்கும் உலகில் குரங்கு ஒன்று தனக்கு உணவு தந்தவருக்கு செலுத்திய புன்னகை நன்றி இணையத்தை உலுக்கும் புகைப்படமாக வலம் வருகிறது. 

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கதி கலங்கி இயங்காமல் நின்று கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை, உணவில்லா தவிப்பு மற்றும் பல இடங்களில் ஊரடங்கு என அனைத்துலகும் முடங்கியுள்ளது. 

இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு சில தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உணவு பொருள்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மனிதர்களை கவனித்து கொள்ளவே பிறர் தேவைப்படுகையில், விலங்குகளை யார் கவனிப்பார்கள்? இருப்பினும், சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் விலங்குகளை தேடி சென்று உணவளிப்பதையும் வழக்கமாக தற்பொழுது செய்து வருகின்றனர். 

இந்நிலையில், வழியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரது கண்ணாடி ஜன்னல் பக்கமாய் குரங்கு சென்று நிற்க, அவர் அந்த குரங்குக்கு பழம் ஒன்றை கையில் கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்ட அந்த குரங்கு நன்றியை தனது புன்னகையால்  தெரிவிக்கிறது.

இந்த குரங்கின் புன்னகை புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் இந்த உலகம் மனித உயிர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, உயிர் வாழ வேண்டிய விலங்குகளும் இவ்வுலகத்தில் உள்ளது என நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இதோ அந்த அழகிய புகைப்படம், 

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago