இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்திற்கான உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், புதிதாக 41 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 சதவீதமும் உயிரிழந்தவர்கள் 2 சதவீதமும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் கடந்த வாரத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பி.1.617 வகை கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் தற்பொழுது பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 வகைகளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…