அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக வருகின்ற மே 10 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக தகவல்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாராவும், ரஜினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக 1 வாரம் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்க்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது, ஆனால் ரஜினிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில காட்சி மட்டும் ஹைதராபாத்தில் வைத்து படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…