அமெரிக்காவில் டெக்ஸால் பகுதியை சார்ந்த ஹார்லி மோர்கன்(19) என்பவர் தன் தோழி பவுட்ரியாக்ஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தின் நீதிபதியின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் பதிவில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தது பார்க்கிங்கில் இருந்த தங்கள் காரில் ஏறினார்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் கார் நான்கு முறை சாலையில் உருண்டு சென்றது. இந்த சம்பவத்தில் காதல் ஜோடி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மோர்கன் தாய் லஷாவ்னா கூறுகையில் , திருமணத்திற்கு வாழ்த்த வந்தேன். ஆனால் இவர்கள் இறப்பதை பார்க்கவேண்டிய நிலைமை வந்து உள்ளது என கண்ணீர் விட்டு கதறினார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…