அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா.! கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது.

ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வழிகாட்டுதலின் பெயரின் ஏற்கனவே 2023 மார்ச் மாதம் முதல் ‘ஹெயில்’ எனும் கடலுக்கு அடியிலான அணுஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இனி அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள கூடாது என ஐநா கூறியும் தங்கள் அணு ஆயுத சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுதான் வருகிறது.

அந்நாட்டு செய்தி நிறுவனம் KCNA செய்தி குறிப்பின்படி , நேற்று (வெள்ளி கிழமை) வடகொரிய ராணுவத்தின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டார் என குறிப்பிட்டுள்ளது.

வடகொரிய ஆயுதத் தொழிற்சாலைக்கு சென்றிருந்த கிம், அங்கு, எதிரி நாட்டு ​அணு ஆயுதத்தை தடுக்கும் வகையிலான ஆயுதத்தை உருவாக்க கூறினார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், வடகொரியாவின்  இந்த அணு ஆயுத சோதனைகளை கண்டு எதிரிகள் பயப்படுவார்கள் என்றும் கிம் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதனை அடுத்து, வட கொரியா, தங்கள் நாட்டு எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்றும், தென் கொரிய இராணுவம் கூறியது. இந்த வெற்றிகரமான சோதனையை கண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி அடைந்ததாகவும் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

24 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago