முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர்.
ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர்.
பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, அதை தையல் போட்டு சரி செய்துள்ளனர். அதன் பிறகு, அலி ஷம்சிக்கு கட்டி நீக்கப்பட்ட சரி செய்த அவருடைய சிறுநீரகத்தையே மீண்டும் பொருத்தியுள்ளனர். பின்னர் அதனை செயல்பட வைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை 11 மணி நேரங்கள் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, அலி ஷம்சிக்கு ஏற்கனவே சிறுநீரகத்தின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இவரது சிறுநீரகத்தையே வெளி எடுத்து சரி செய்து பொருத்த முடிவு செய்ததாக கூறியுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…