கீர்த்தி சுரேஷ் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது, ஒரு நபர் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட தருணத்தை மறக்க இயலாது என்று கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அவர் தன்னால் மறக்க முடியாத தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்ற போது, கூட்டத்தில் இருந்து ஒரு நபர் அவரின் முன் வந்து போட்டோ ஆல்பம் மற்றும் ஒரு கடிதத்தையும் கொடுத்தாராம். அந்த கடிதத்தில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ? என்று எழுதியிருந்ததை பார்த்து ஷாக்காகி வாயடைந்து போய்விட்டாராம் யாரென்று தெரியாத அந்த நபரையும், தருணத்தையும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…