தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். முதன் முதலாக இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து நடிகர் அப்பாஸிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணமானது அதற்குப் பிறகு சில திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் விளம்பரம் படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக கோ படத்தில் ஒரு பாடலில் மட்டும் வந்திருப்பார் அதற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அப்போது அவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பார்க்கையில் தற்போது அவர் நடித்து இருந்தால் இப்போது விஜய் அஜித்திற்கு இணையாக வந்திருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலகி இது குறித்து சில விஷயங்களை கூறிஉள்ளார். இதில் அவர் பேசியது இந்தியா போன்ற ஒரு நாட்டில் சினிமா கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நியூஸிலாந்தில் அப்படியில்லை அதனால் அங்கு சென்றுவிட்டேன்.
அங்கு சென்று நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்த பிறகு மோட்டார் சைக்கிள் கடையில் மெக்கானிக்காக பணியாற்றினேன். அதற்கு பிறகு கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன். இதனை எல்லாம் நான் விரும்பி ரசித்து செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் பேசிய அப்பாஸ் நான் நியூசிலாந்தில் வேலை செய்யும் போது நான் நடித்த ஒரு படத்தை பார்த்து விட்டு என்னுடன் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் உங்களைப் போலவே இவர் இருக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…