ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த உச்சிமாநாடு ஜூன் 11 -ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கார்ன்வாலில் (Cornwall) நடைபெறுகிறது.மேலும் இந்தியாவைப்போல ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவிற்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஜி 7 மாநாட்டிற்கு முன்னதாக இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை ஜி 7 உறுப்பு நாடுகள் ஆகும்.இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவின் தலைவர்களை விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது.இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,பிரிட்டனில் கொரோனா அதிகரிப்புக் காரணமாக சமீபத்தில் தனது வருகையை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…