உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 167 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6606 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 3,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை இன்று அமெரிக்கா தொடங்கியுள்ளது. வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சி மையத்தில் ஆரோக்கியமாக உள்ள 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்யப்படுகிறது.
இன்று 43 வயதான ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்த கட்டங்களில் இந்த பரிசோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிய வந்த பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…