மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த யாஸ் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிரப் புயலான யாஸ்,தற்போது அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி,ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கு வட கிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும்,மேற்கு வங்க மாநிலம் திகாவுக்கு தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.
இந்நிலையில்,யாஸ் புயலானது தொடர்ந்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.இதனால்,பாரதீப்பிற்கும்,சாகர் தீவுகளுக்கும் இடையே பாலசூர் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும்,புயல் கரையைக் கடக்கும்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா,மேற்கு வங்க மாநிலங்களின் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ராணுவம், விமானப்படை,கடற்படை மற்றும் பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…