பார்ப்பதற்கு அழகு குறைவாகவும் சாதாரணமாகவும் கிடைக்கக் கூடிய சிறு தானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு, மிகுந்த ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்தது. ஆனால் அது குறித்து மக்கள் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததால் வெள்ளை அரிசியை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேழ்வரகில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கேழ்வரகில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், புரதம், நார்சத்து அடங்கியுள்ளதால் இதிலுள்ள மாவு சத்து அரிசியைவிட அதிக அளவு சத்து உடையது. இது சர்க்கரை வியாதி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த கேழ்வரகில் உள்ள சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் காரணமாக வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதுடன் விளையாட்டு வீரர்கள் இதனை அதிகம் பயன்படுத்தலாம். இதன் மூலம் செயல் திறன் அதிகரிக்க உதவும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த கேழ்வரகை பயன்படுத்தலாம். இதில் கொழுப்பினை கரைக்கக்கூடிய நார்சத்து அடங்கி உள்ளது.
எனவே உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த கேழ்வரகை பயன்படுத்தலாம். இதில் உள்ள நார்சத்து காரணமாக மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிம்மதி தருவதுடன் இரத்த சோகையை தடுக்கவும் இது உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்களுக்கு கேழ்வரகு நண்பன் என்றே கூறலாம். எனவேதான் நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகு பயன்படுத்துமாறு மருத்துவர்களால் அறிவுறத்தப்படுகிறது. அரிசி கோதுமைகளை விடவும் கேழ்வரகு மிகவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை உண்டு பயனடைவோம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…