விமானத்தில் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அறைகள், அரங்குகள் மற்றும் மூடப்பட்ட அறைகளுக்குள், கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகள் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதனால் வைரஸ் பரவும் ஆப்பத்து உள்ளது.
ஆனால், விமானத்தில் பயணிக்கும் போது வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மார்ச் 9-ம் தேதி, டெல் அவிவ் நகரில் இருந்து,ஃ பிராங்பர்ட் சென்ற விமானத்தில் 102 பேர் பயணித்துள்ளனர். இதில் 7 கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், 4 பேர் அறிகுறிகளுடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் யாரும் மாஸ்க் அணியவில்லை. இந்த விமானத்தில் பயணித்தவர்களை ஆய்வு செய்ததில், 2 பேருக்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், சீரான இடைவெளியில் புதுப்பிக்கப்படும் காற்றோட்டத்தின் காரணமாக, வைரஸ் பரவும் ஆபத்து குறைந்திருக்கலாம் என்று, மாஸ்க் அணிந்திருந்தால் இந்த ஆபத்தும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…