கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் சில விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வகையில் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தற்போது சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பலர் வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். அந்த வகையில் பிரபலங்களில் பலர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடித்து வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கிற்கு பின்னர் வேலைக்கும் போகும் நபர்கள் கொரோனா பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹரிஷ் கல்யாண் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு யார் சென்றாலும் முதலில் தெர்மல் ஸ்கேனிங் செய்து விட்டு உள்ளே அனுமதிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்ப கூடாது. எப்போதும் எல்லா இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை சோப் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். அலுவலகங்களில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் கழிவறைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், யாரிடமும் ஷேக்கன்ட் கொடுப்பதை விட்டு விட்டு வணக்கம் சொல்லி பழகுங்கள். குறிப்பாக அரசாங்கம் சொல்லும் அனைத்து விதிமுறைகளையும் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடைபிடித்தாலே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
</p
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…