உண்மையான உறவுக்குள் இந்த மூன்று மட்டும் வரவே கூடாதாம்..!

Published by
Rebekal

உறவுகள் என்பது உலகில் உள்ள அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. அனைவருக்குமே உறவுகளை பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. ஒரு உறவில் முறிவு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக அளவிலான அன்பு கொண்ட உறவிலும் கூட பிரிவு ஏற்படும்.

அதிக அன்பு கொண்ட உறவில் எப்படி முறிவு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் உறவுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதாது, உறவுகளுக்குள் சில விஷயங்கள் தலையிடாமல் இருக்க வேண்டும். அது கணவன் மனைவி உறவாக இருந்தாலும் சரி, அம்மா அப்பா, அண்ணன் தங்கை, மாமியார் மருமகள், நண்பர்கள் யாராக இருந்தாலும் முக்கியமான மூன்று விஷயங்கள் மட்டும் வராவிட்டால் நிச்சயம் அந்த உறவுகளுக்குள் பிரிவும் ஏற்படாது, முறிவும் ஏற்படாது.  அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

குறைவான அன்பு

உறவுகளுக்கு முக்கிய ஆதாரமே அன்பு தான். அன்பு இல்லாவிட்டால் ஒரு உறவு உருவாகவே முடியாது. இந்த அன்பு ஒரு உறவில் அதிக அளவில் இருக்கும் பொழுது அந்த உறவு வலுவானதாகவும் இருக்கும், நீண்ட காலம் நீடிக்கவும் செய்யும். இந்த அன்பில் குறைவு ஏற்படும் பொழுதுதான் உறவில்  பிரிவு ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே ஒரு உறவை வலுப்படுத்தி நீடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒரு நாளும் இந்த அன்பில் பற்றாக்குறை ஏற்பட விடக்கூடாது.

பேராசை

இது ஒரு உறவுக்குள் இருக்கக்கூடாத மிக முக்கியமான ஒரு விஷயம். பேராசை வந்துவிட்டால் உறவுகளுக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிரிவை உணடாக்கி விடும், அல்லது அளவுக்கு மீறிய ஆசை உருவாகும் பொழுது உறவுகளுக்குள் பலவீனம் ஏற்படும். ஒரு நபருக்கு பிடித்ததை மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்ள விரும்பினாலும் சரி, நம்மால் பெற முடியாத ஒன்றை அடைய நினைத்தாலும் சரி அது தவறு தான். இந்த உறவு நிலைக்க முடியாது. இந்த பேராசையை ஒழிக்கும் பொழுது உறவுகள் நீண்டகாலம் நிலைக்கும்.

சுயநலம்

சுயநலம் உறவுகளுக்குள் ஒரு நாளும் இருக்க கூடாது. இது ஒரு உறவுக்கு அழகும் கிடையாது. உறவுகளுக்குள் சுயநலம் மறைந்து கிடக்கும் பொழுது எந்த ஒரு உறவும் நீடித்த உறவாக நிலைக்க முடியாது. மிக விரைவாகவே இந்த உறவுகள் உடைந்து விடும். எனவே சுயநலத்தை உறவுகளிடம் இருந்து ஒதுக்கி வைத்தால் மட்டுமே இருவருக்கிடையேயான நட்பும், உறவும் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கும்.

ஒரு உறவு வலுவாக நீண்ட நாள் நிலைத்து நிற்க வேண்டுமானால் அன்பு ஒருநாளும் குறையக்கூடாது, பேராசை உறவுகளுக்குள் இருக்கக்கூடாது, சுயநலம் ஒருநாளும் வரவே கூடாது. இது மூன்றும் இல்லாமல் இருக்கக் கூடிய உறவுகள் நிச்சயம் வாழ்வின் கடைசிவரை நிலைக்கக்கூடிய உறவுகளாக மட்டுமே இருக்கும்.

Published by
Rebekal

Recent Posts

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

28 minutes ago

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…

1 hour ago

வயநாடு : தொடரும் கனமழை…முண்டக்கையில் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவு!

கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…

2 hours ago

பாஜகவில் இணைய போகிறாரா மீனா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…

2 hours ago

என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் -பாமக நிறுவனர் ராமதாஸ் திட்ட வட்டம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

3 hours ago

விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago