திருவெம்பாவை
பாடல் : 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கனவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்!
– மாணிக்கவாசகர் –
பாடல் விளக்கம்:
எல்லோரும் சேர்ந்து பாடுதல் முன்னே தோன்றிய பழைமையான எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டிருக்கும் பழமையான மூலப் பொருளே! அவ்வாறே பின்னே தோன்றும் புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக மீண்டும் தோன்றும் தன்மையனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள்,உன் சிறந்த அடியார்களானோம், ஆதலால்,உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம் அங்ஙனமே அவர்களுக்கு உரிமையுடைவர்களாவோம் அவர்களே எங்கள் கணவர்கள் ஆவர். அவர்கள் விரும்பிக் கூறும் முறையிலேயே அடிமையாகிப் பணி செய்வோம்.எங்கள் தலைவனே! இந்த வகையன வாழ்க்கையையே எங்களுக்கு நீ வழங்குவாயானால் எந்தக் குறையும் இல்லாதவர்களாவோம்! என்று மாணிக்கவாசகர் அருளிகிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…