திருவெம்பாவை
பாடல் : 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?
-மாணிக்கவாசகர்-
பாடல் விளக்கம்:
சிவபெருமான் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற் பணிப்பெண்களே! பாதாளம் ஏழுக்கும் கீழே, மலர்களை நிறையச் சூடிய அவன் திருமுடி, எல்லாப் பொருள்களும் கீழ்ப்பட மேற்ப்பட்டுள்ளது.அவன் உமையை ஒரு பாகத்தில் உடையவன்;ஆதலால் ஒரு திருமேனியுடையவனல்லன்,அவன் மறைகளுக்கு முதல்வன் விண்ணகத்தாரும்,மண்ணகத்தாரும் அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும், வரையறுத்துப் புகழ முடியாத உயிர்த்துணைவன்;தொண்டரகள் உள்ளத்தில் உறைபவன்! அவன் ஊர் யாது? அவன் பேர் யாது? அவனுக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் தன்மை எப்படி? கூறுவீர்களாக! என்று அருளிகிறார் மாணிக்கவாசகர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…