பாடல் : 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீ!
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோன் பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணணே நமக்கே பறைதருவான்
பாரோ புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீஆண்டாள்-
பொருள் :-
பொருத்தமான அணிகலங்களை அணிந்த பெண்களே! செல்வம் கொழிக்கும் ஆயர்பாடியிலே உள்ள செல்வச் சிறுமியர்களே நாராயணன் வேல் கொண்ட கொடிய தொழிலுடையவனாகிய நந்தகோபன் மகன்;அழகு நிறைந்த கண்களை உடையவன்,கதிர் விரிக்கும் முழுமதி போன்ற முகமுடையவன்,அவன் நாம் விரும்பிய பொருளெல்லாம் வழங்குவான்,இன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி நல்ல நாள்,உலகத்தார் புகழும் வண்ணம் நீராட வருபவர்களே! வாருங்கள்!
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…