திருப்பாவை
பாடல் :12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தா நெழுந்திராவ் , ஈதென்ன பெருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
– ஸ்ரீ ஆண்டாள் –
பாடல் விளக்கம் :
இளங்கன்றினையுடைய எருமைகள் கனைத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று,தம் முலை வழியாகப் பால் சொரிந்து நனைத்து வீட்டைச் சேறாக்குகின்றன அத்தகைய எருமைகளை உடைய நல்ல செல்வனுடைய தங்கையே!மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ,உன் வீட்டுக் கடைவாசலில் நிற்கின்றோம்,தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனை கோபத்தினால் அழித்த நெஞ்சிற்கினியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம் கதவைத்திற! இது ர்ன்ன உறக்கம்? நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது! இனியாவது எழுந்து வா! என்று அருளுகிறார் ஆண்டாள்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…