இதய நோய் வராமல் இருக்க இதை மட்டும் பண்ணுன போதும்!

Published by
லீனா

இன்றைய நாகரீகமான உலகில், மிக கொடிய நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இதய நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு நாம் தான் காரணமாகிறோம். தற்போது இந்த பதிவில் இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்மில் அதிகமானோர் உடற்பயிற்சி செய்வதை அலர்ச்சியமாக எண்ணுகின்றோம். ஆனால், நாம் உடற்பயிற்சி செய்வதால், நமது உயிருக்கு உலை வைக்கும் பலவிதமான கொடிய நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

உணவு பழக்கம்

இன்றைய நாகரீகமான உலகில், நமது அன்றாட வாழ்வை மேலை நாட்டு உணவுகள் தான் அக்கிரமித்து உள்ளது. இந்த உணவுகள் நமது உடலில் அதிகப்படியான கொழுப்புகள் உருவாக வழிவகுக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

எண்ணெய்

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எண்ணெயில் பொறித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. இதய நோய்கள் ஏற்படுவதற்கு எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுவதும் ஒரு காரணம். எனவே இந்த உணவுகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

மன அழுத்தம்

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்ற மிகப்பெரிய நோய் இந்த மன அழுத்தம் தான். இதில் இருந்து வெளிவருவதற்கான யுக்திகளை கையாண்டாலே, நமக்கு இதய நோய் ஏற்படாமல் நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

நாம் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்தாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில், நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து வந்தால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago