சந்திரமுகி 2 ல் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் இதுதானா..!

Published by
Ragi

சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பதாகவும், அந்த அரண்மனை பங்களாவில் வந்து தங்கும் புதிய குடும்பத்தை வேட்டையன் மற்றும் சந்திரமுகி என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் கதை என்று உண்மையை போட்டுடைத்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்காக கிடைத்த அட்வான்ஸ் பணத்தை தான் லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிதியாக அனைவருக்கும் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் பி. வாசு சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரத்தை கூறியுள்ளார்.

ஆம், இயக்குநர் பி. வாசு சமீபத்தில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சந்திரமுகி 2 முதல் பாகத்தில் வந்த கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டது. அதில் வேட்டையனாக நடித்த ரஜினி மற்றும் ஜோதிகாவிற்கு இடையில் என்ன நடந்தது, அவர்கள் ஏன் பகைவர்கள் ஆனார்கள் என்பதன் பின்னணியை கூறுவதாக சந்திரமுகி திரைப்படம் இருந்தது. உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பதாகவும், அந்த அரண்மனை பங்களாவில் வந்து தங்கும் புதிய குடும்பத்தை வேட்டையன் மற்றும் சந்திரமுகி என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் கதை என்று உண்மையை போட்டுடைத்துள்ளார். மேலும் முதல் பகுதியில் ரஜினிக்கு ஏற்றவாறு கதையை எவ்வாறு எழுதப்பட்டதோ, அதை போன்று ராகவா லாரன்ஸ் தன் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் அளவிற்கு சந்திரமுகி 2 எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்களை குறித்த தகவல் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

5 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

8 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago