வரலாற்றில் இன்று (17-12-2019) : ஓய்வூதிய நாள்!

Published by
மணிகண்டன்
  • வருடா வருடம் இன்றைய தினம் ஓய்வூதிய தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 17-12-1982இல் உச்சநீதிமன்றம் ஓய்வூதியம் குறித்து தீர்ப்பளித்தது.

1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றமானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை நீதிபதி D.S.நகரா வழங்கினார். அதாவது அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பின் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. அதிலும் எந்தவித பிரிவின் கீழ் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமான ஓய்வூதியத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வு கால நிலை குறித்து பல்வேறு ஓய்வுதிய சங்கங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அந்த தீர்ப்பானது இதே டிசம்பர் 17ஆம் தேதி 1982 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஓய்வூதியம் என்பது ஊழியர்கள்  உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு மொத்தமாக கொடுக்கப்படும் ஊதியம் ஆகும். அரசியல் சட்டப்பிரிவு 139 மற்றும் 145 (5)-ன் படி ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு ஊதியமானது சொத்துரிமை போன்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ம் தேதி ஓய்வூதியர் நாள் என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

27 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

58 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago