இந்தியாவின் ஆறாவது பிரதமரும், அரசியல்வாதியுமாகிய மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார். மேலும், இவருக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவரது தாயார் இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட இவரது தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தொன்றில் காலமாகியுள்ளார்.
அதன் பின் மிகுந்த தயக்கத்துடன் இவர் அரசியலுக்கு வந்துள்ளார். பின் இவரது தம்பி சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதியில் 1981 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் 1991ஆம் ஆண்டு மே 21 தேதி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு 1991 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…