இன்றைய (08.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் :  குறைகள் அகலக் குமரன்  வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியானது கை கூடும்.சகோதரர்கள் கேட்ட உதவிகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்வர். ம்ங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : வளர்ச்சி அதிகரிக்க வள்ளி காதலனை வழிபட வேண்டிய நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றம் காணுவீகள். கையில்  பணப்புழக்கம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

மிதுனம் : பேச்சுத்திறமையால் எத்தைகய சூழ்ச்சியையும் முறியடுத்துவிடுவீர்கள் சுபச் செலவு அதிகரிக்கும்  குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் அளிக்கும்.

கடகம் : தொலை பேசி வழித் தகவலானது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆறுமுகன் வழிபாட்டால் அருளை வரவழைத்து ஆனந்தம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பற்றிய இனிய தகவலானது வந்து சேரும். உறவினர்கள் வழியில் விரயம் ஏற்படும்.

சிம்மம் : உத்யோக உயர்வு கிடைக்கும் நாள். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி ஆனந்தம் கொள்வீர்கள்

கன்னி :  புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டு மகிழுக்கூடிய நாள். மனதில் மகிழ்ச்சி கூடும். வருமானம் உயரும். எடுக்கும் முடிவுகளுக்கு உறவினர்களின் ஆதரவு கொடுப்பர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.

துலாம் : பிரியமானவர்களோடு இதுவரை இருந்த பிரச்சினைகள் இன்று அகலும். சொல்லுகின்ற சொல் வெல்லும் சொல்லாக மாறும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் அவற்றை விற்றுப் புதிய  சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம் :  சொல்லைச் செயலாக்கிக் காட்டி மகிழும் நாள்.முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழிலில் வளர்ச்சியானது அதிகரிக்கும். மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தனுசு :  முருகன்  வழிபாடு முன்னேற்றத்தை அருளும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது இன்று நல்லது. வரன் கள் விஷ்யத்தில் ஏமாற்றம் ஏற்படலாம்.விழிப்புடன் செயல்பட்டால் விரயங்களை தடுக்கலாம்.

மகரம் :  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கவலைத் தீரக் கந்தனை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். சந்தித்தவர்களால் மனதில் சந்தோ‌ஷம் குடிகொள்ளும்.விலகிச் சென்ற உறவினர்கள் எல்லாம் விரும்பி வந்து இணைவர். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.

கும்பம் : தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெறுகின்ற நாள். கனவுகள் நனவாகின்ற நல்ல நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள். அருகில் இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்ல பயனைத் தரும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.

மீனம் : திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும்.பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

Recent Posts

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

8 minutes ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

27 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago