இந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்களை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களுக்கும் சினிமா திரைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது என்ற கூறலாம். இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகதஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்தது இதனால் விஜய்யை வசூல் சர்க்ரவர்த்தி என்று அழைத்தனர். இதுமட்டுமின்றி மாஸ்டர் படம் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. ஆம் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தில் மாஸ்டர் படம் தான் உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியலை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இதில் முதலிடத்தில் மாஸ்டர் திரைப்படம் 222.75 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் 18.8 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் 9.4 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 6.65 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 5.1 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…