இந்தியாவில் இன்று முதல் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.யாரிஸ் தயாரிப்பு நிறுத்தப்படுவது பற்றிய செய்திகள் நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தன.அந்த வகையில், இன்று முதல் இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டதாக,டோயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக,நடுத்தர அளவிலான செடான் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்றவற்றுக்கு டொயோட்டா யாரிஸ் போட்டியாக இருந்தது.
இந்த நிலையில்,இந்திய சந்தையில் இருந்து டொயோட்டா யாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.எனினும்,யாரிஸின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருட உதிரி பாகங்கள் கிடைக்க ஆதரவளிப்பதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.அதே வேளையில், நாடு முழுவதும் உள்ள தனது டீலர் சேவை நிலையங்கள் மூலம் அனைத்து யாரிஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,இனி நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் டொயோட்டா கிளான்சா, அர்பன் க்ரூஸர், இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்றவை இருக்கும் என தெரிகிறது.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…