பிரபல இயக்குனரான சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயகுமார் நேற்றைய தினம் திடீரென காலமானார்.அவரது இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின் கார்த்தியை வைத்து சிறுத்தை எனும் படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ‘சிறுத்தை சிவா”. அதனையடுத்து தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பல ஹிட்களை கொடுத்தார் . அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான வீரம் , வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரது வீட்டில் சோக நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது . சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயகுமார் நேற்றைய தினம் திடீரென சென்னையில் வைத்து காலமாகியுள்ளார் . பிரபல தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் அவர்களின் மகனும் , மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் பாலாவின் தந்தையுமான ஜெயக்குமார் ஒரு டாக்குமெண்டரி போட்டோகிராபர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாவின் தந்தையின் இறுதி சடங்குகள் சென்னையில் வைத்து இன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது . வாழ்க்கைக்கு ஆறுதலாகவும் , வளர்ச்சிக்கு ஏணிப்படியாகவும் திகழ்ந்த சிவாவின் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…