வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் புதிப்பிக்கப்பட்ட கட்டண முறைகளை தொலைக்காட்சி திரையில் அறிவிக்க வேண்டும் என்றும் விநியோக தள ஆப்ரேட்டர்கள் வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள் புதிய கட்டண விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின் அடிப்படையில் சன் டைரக்ட், டிஷ் டிவி, d2h ,டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஆகிய வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். மேலும், 200 சேனல்களை பார்ப்பதற்க்கு மாதத்துக்கு 130 ரூபாய் கட்டணம் (வரி உட்பட) என்ற மதிப்பில் கிடைக்கும். இதற்க்கு முன்னதாக 130 ரூபாய்க்கு 100 சேனல்கள் மட்டுமே வழங்கிக்கொண்டு இருந்தது. மேலும், ஒவ்வொரு கூடுதல் 20 சேனல்களுக்கும் 25 ரூபாய் கட்டணமாய் விதிக்கப்படும். இந்தக் கட்டண அமைப்புக்குள் தூர்தர்ஷன் சேனல் மட்டும் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் அறிவிப்பு தொலைக்காட்சி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…