Andhra Couple - Car Crash [Image source : m9 news]
ஆந்திர மாநிலம் அமலாபுரம் நகரை சேர்ந்தவர்கள் 64 வயதான நாகேஸ்வரராவ் மற்றும் 60 வயதான சீதாமஹாலக்ஷ்மி ஆகியோரது மகள் நவீனா மற்றும் அவரது கணவர் லோகேஷ் ஆகியோர் எல்1 விசாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிஷிதா மற்றும் ஹிருத்திக் என இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.
லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!
தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு நாகேஸ்வரராவ் மற்றும் சீதாமஹாலக்ஷ்மி ஆகியோர் ஆந்திராவில் இருந்து அமெரிக்கா சென்று இருந்தனர். நேற்று லோகேஷ்,மினி வேனில் தனது குடும்பத்துடன் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த்துக்கு அருகிலுள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த சமயம் எதிரே வந்த ட்ரக் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், லோகேஷ் தவிர நாகேஸ்வரராவ், சீதாமஹாலக்ஷ்மி, நவீனா, நிஷிதா மற்றும் ஹிருத்திக் ஆகிய 5 பேரும், வாகன ஓட்டிவந்த குடும்ப நண்பரான ருஷில் பாரி என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . லோகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிரே வந்த ட்ராக் ட்ரைவர் மற்றும் 17 வயதான இளைஞனும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோர்கள் ஆந்திர மாநிலம் மும்மிடிவரம் எம்எல்ஏ பி.வெங்கட சதீஷ் குமாரின் உறவினர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…